×

குவாரி உரிமையாளரை பணம் கேட்டு மிரட்டிய பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட தலைவர் கைது

 

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே சவுடு மண் குவாரி உரிமையாளரை பணம் கேட்டு மிரட்டிய பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட தலைவரை போலீசார் கைது செய்தனர்.பெரியபாளையம் அருகே வடமதுரை கிராமத்தை சேர்ந்தவர் கோதண்டன். இவர் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். இவர் வேம்பேடு கிராமத்தில் சவுடு மண் குவாரி எடுத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு கீழானூர் பகுதியை சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட தலைவர் பிரேம்குமார் என்பவர் தனது ஆதரவாளர்களுடன் குவாரிக்கு சென்று கோதண்டனை பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோதண்டன் பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலீசார் நேற்று முன்தினம் பிரேம் குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை ஊத்துக்கோட்டை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது .

The post குவாரி உரிமையாளரை பணம் கேட்டு மிரட்டிய பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட தலைவர் கைது appeared first on Dinakaran.

Tags : Bahujan Samaj Party ,Oothukottai ,Chaudu Mud Quarry ,Periyapalayam ,
× RELATED பாஜவுக்கு நல்ல நாட்கள் வந்தது,...