பனாஜி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று கோவா மாநில காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்து பேசினார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனிப்பட்ட பயணமாக நேற்று முன்தினம் கோவா சென்றார். தபோலிம் விமான நிலையத்தில் இறங்கிய அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ராகுல்காந்தி, அங்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. கட்சியை வலுப்படுத்துதல் மற்றும் மற்ற அரசியல் விவகாரங்கள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
The post கோவா காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல் ஆலோசனை appeared first on Dinakaran.