×

தொடர் அமளியால் அதிருப்தி அடைந்த மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவை சந்தித்து அவைக்கு வருமாறு எதிர்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை..!!

டெல்லி: மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவை சந்தித்து அவைக்கு வருமாறு எதிர்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நடப்பு மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் மக்களவையில் அமளி நிலவி வருகிறது. பிரதமர் நாடாளுமன்றத்தில் பதிலளிக்கக் கோரி எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபடும் நிலையில், எதிர்க்கட்சிகளுக்கு இணையாக ஆளுங்கட்சியினரும் அவையில் முழக்கமிட்டு வருகின்றனர். இதனால் கடந்த 20ம் தேதி தொடங்கிய கூட்டத்தொடரில் ஒருநாள் கூட முழுமையான அலுவல்கள் நடைபெறவில்லை.

தொடர் அமளி காரணமாக மிகவும் அதிருப்தி அடைந்த சபாநாயகர் ஓம்பிர்லா, நேற்று மக்களவைக்கு வரவில்லை. உறுப்பினர்கள் அனைவரும் ஒழுங்குடன் நடந்து கொண்டால் மட்டுமே அவைக்கு வருவேன். அவையை கண்ணியத்துடன் நடத்த அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம் என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மக்களவை இன்று தொடங்கியபோதும் அவையில் தொடர்ந்து அமளி நிலவுவதால் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா 2 நாளாக அவைக்கு வரவில்லை.

இதனால் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவை சந்தித்து அவைக்கு வருமாறு எதிர்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காங்கிரஸ் எம்.பி.க்கள் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, சுப்ரியா சுலே, திரிணாமுல் சவுகதாராய், கனிமொழி அழைப்பு விடுத்துள்ளனர். ஓம்பிர்லா அவைக்கு வந்து அலுவல்களை நடத்துமாறு பரூக் அப்துல்லா உள்ளிட்டோரும் அழைப்பு விடுத்தனர்.

The post தொடர் அமளியால் அதிருப்தி அடைந்த மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவை சந்தித்து அவைக்கு வருமாறு எதிர்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை..!! appeared first on Dinakaran.

Tags : Amali ,Speaker ,Omberla ,Delhi ,Ombirella ,Manipur ,Ombirla ,
× RELATED ராகுல், ஓம்பிர்லா தொகுதிகளில் இன்று...