×

பஸ் மோதி பெண் பலி 2 பேர் படுகாயம்

கிருஷ்ணகிரி, ஆக.3: பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி டி.எஸ்.பாளையம் பகுதியைத் சேர்ந்தவர் ரஞ்சித். இவர் தனது மனைவி பவித்ரா(25) மற்றும் உறவினர்களுடன், பெங்களூருவில் இருந்து தர்மபுரி நோக்கி, நேற்று முன்தினம் அதிகாலை, காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, காவேரிப்பட்டணம் அருகேயுள்ள திம்மாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே சென்றபோது, பின்னால் வந்த தனியார் பஸ் இவர்களது கார் மீது மோதியது. இதில் பவித்ராவுக்கு படுகாயம் ஏற்பட்டது.

காரில் இருந்த மற்றவர்கள் காயங்களின்றி உயிர் தப்பினர். மேலும் தனியார் பஸ்சில் இருந்த, தர்மபுரி ஏரிக்கொடியை சேர்ந்த மகாலட்சுமி, நிர்மலா ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் காயமடைந்த 3பேரையும் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி பவித்ரா உயிரிழந்தார். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பஸ் மோதி பெண் பலி 2 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Ranjith ,DS Palayam ,Bengaluru ,City ,Pavitra ,
× RELATED இந்தியா கூட்டணி வெற்றிபெற வேண்டும்: இயக்குநர் பா.ரஞ்சித் பேட்டி