×

பொது நல ஓய்வூதியம் ேகட்டு நீடாமங்கலத்தில் ஆர்ப்பாட்டம்

நீடாமங்கலம், ஆக.3: நீடாமங்கலம் தாலுகா அலுவலகம் முன் சி.பி.எஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார். கிராம உதவியாளர் சங்க வட்ட செயலாளர் வீரமணி முன்னிலை வகித்தார். கிராம உதவியாளர் சங்க மாவட்ட மகளிரணி கவிதா வரவேற்றார். சிறப்பு கருத்தாளராக மாநில கிராம உதவியாளர் சங்கம் தமிழ்செல்வன், வருவாய் ஆய்வாளர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். கிராம உதவியாளர் சங்க வட்ட பொருளாளர் ராஜேந்திரன் மற்றும் அனைத்து துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. நீடாமங்கலம் பட்டதாரி ஆசிரியர் சுரேஷ் நன்றி கூறினார்.

The post பொது நல ஓய்வூதியம் ேகட்டு நீடாமங்கலத்தில் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Public Welfare Pension Union ,Needamangalam ,CBSE ,Eradication ,Movement ,CBSE Abolition Movement ,General ,Welfare Pension Union ,Dinakaran ,
× RELATED புவி வெப்பமயமாதலை தடுக்க அதிக அளவில்...