பொன்னமராவதி, ஆக.3: பொன்னமராவதி அருகே ஆலவயல் கூட்டுறவு வங்க முன்பு மழைநீரை வெளியேற்ற பாலம் அமைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து ஆலவயல் ஊராட்சி 6வது வார்டு உறுப்பினர் சுப்பிரமணியன், மாவட்ட கலெக்டர் மற்றும் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: ஆலவயல்-தூத்தூர் சாலை மேம்படுத்தப்பட்ட போதே ஆலவயல் கூட்டுறவு வங்கி முன்பு பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்தோம். ஆனால் பாலம் அமைக்கவில்லை. இதனால் கூட்டுறவு வங்கி முன் மற்றும் வளாகம் குடியிருப்பு பகுதி பாலம் ஓரம் மழைநீர் அதிகம் தேங்கி நிற்கிறது. சாலையின் மேற்குப் பகுதியில் இருந்து கிழக்கு பகுதிக்கு தண்ணீர் வெளியேற்றி வழியில்லை என பொதுமக்கள், வாகன ஓட்டிகள், கடைகாரர்கள் மழை நீரால் பாதிக்கபடாமல் இருக்க கூட்டுறவு வங்கி முன்பு சாலையின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என அந்த மனுவில் கோரியுள்ளார்.
The post ஆலவயல் கூட்டுறவு வங்க முன் மழைநீரை வெளியேற்ற பாலம் அமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.