சேலம்: ஆடி பேருக்கு விழாவை முன்னிட்டு மேச்சேரி ஆட்டு சந்தையில் சுமார் 3 கோடி ரூபாய் அளவுக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது. மேட்டூர் அருகே உள்ள மேச்சேரியில் வாரந்தோறும் புதன் கிழமைகளில் ஆட்டுச் சந்தை கூடுவது வழக்கம். நாளை ஆடிப்பெருக்கு என்பதால் 5 ஆயிரத்திற்கும் அதிகமான ஆடுகளை ஆடு வளர்ப்பு விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்தனர். கடந்த வாரங்களை விட ஆடுகள் வரத்து 2 மடங்காக அதிகரித்ததால் அவற்றின் விற்பனையில் நல்ல விலை கிடைக்கவில்லை.
கடந்த வாரம் 12 கிலோ எடை கொண்ட ஆடு ஒன்று 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இன்று 8 ஆயிரம் ரூபாய்க்கு மட்டுமே விற்கப்பட்டதால் விவசாயிகள் சோகத்தில் ஆழ்ந்தனர். அதிகாலை 5 மணிக்கு தொடங்கிய ஆடுகள் விற்பனையில் 8 மணிக்கு 3 கோடி ரூபாய்க்கு விற்பனையானது. தொடர்ந்து ஆடுகள் வரத்து இருந்ததால் மேலும் விற்பனை களைகட்டும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
The post ஆடிப்பெருக்கு விழாவையொட்டி மேச்சேரி ஆட்டு சந்தையில் ரூ.3 கோடி அளவுக்கு ஆடுகள் விற்பனை விறுவிறுப்பு..!! appeared first on Dinakaran.