×

இறைச்சி கடைக்காரர் தூக்கிட்டு தற்கொலை: குடும்ப பிரச்னையா? விசாரணை

புழல்: சென்னை புழல் திருநீலகண்டநகர் 2வது தெருவை சேர்ந்தவர் வசந்தகுமார் (33). வழக்கறிஞருக்கு படித்து, பல காரணங்களால் படிப்பை பாதியிலே நிறுத்தியுள்ளார். அதன்பிறகு காவாங்கரை பகுதியில் இறைச்சிக்கடை நடத்தி வந்துள்ளார். இவரது மனைவி சரஸ்வதி. இந்நிலையில் நேற்று இரவு காவாங்கரை கண்ணப்பசாமி நகர் 27வது தெருவில் வசித்து வரும் தனது தாய் சுந்தரி வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு மின்விசிறி கொக்கியில் நைலான் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்ததும் புழல் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து வசந்தகுமாரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குடும்ப பிரச்னையில் தற்கொலை செய்தாரா? அல்லது வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் தற்கொலை செய்தாரா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் புழல் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post இறைச்சி கடைக்காரர் தூக்கிட்டு தற்கொலை: குடும்ப பிரச்னையா? விசாரணை appeared first on Dinakaran.

Tags : Vasanthakumar ,2nd Street ,Chennai Purgulam Thirunilakanagar ,
× RELATED பெரம்பூரில் மாநகர பஸ் மோதி ஐடிஐ மாணவன் பரிதாப சாவு