×

சென்னையை அடுத்த பனையூரில் இருசக்கர வாகனம் மீது கிரேன் மோதிய விபத்து: இளைஞர் பலி

சென்னை: சென்னையை அடுத்த பனையூரில் இருசக்கர வாகனம் மீது கிரேன் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். சென்னையை அடுத்த கிழக்கு கடற்கரை சாலை பனையூர் பகுதியை சேர்ந்தவர் ரஷீத் அஹமது(23) இவர் தமுமுக அமைப்பில் நிர்வாகியாக உள்ளார். இந்நிலையில் இன்று காலை 4மணி அளவில் இருசக்கரவாகனத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் பெட்ரோல் போடுவதற்காக சென்றுள்ளார். அப்போது அதே மார்க்கமாக சென்ற கிரேன் ஒன்று வலதுபக்கமாக தடுப்புகள் மீது மோதி இடதுபக்கமாக நிலைதடுமாறி சென்றபோது இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் ரஷீத் அஹமது பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் அந்த கிரேனும் நடுச்சாலையில் நிறுத்திவிட்டு அதன் ஓட்டுநர் தப்பி சென்றார். இதனால் விபத்து ஏற்பட்ட இடத்தில் சம்பந்தப்பட்ட உறவினர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீனர்வகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் ஒன்று கூடி தொடர்ந்து கிழக்கு கடற்கரை சாலையில் விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும். அதிகாலை 4 மணியிலிருந்து 6.30 மணி வரை நேரமாக மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் இரு மார்க்கத்திலும் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளதால் போலீசார் போக்குவரத்தை மாற்றியுள்ளனர்.

பொதுக்களிடம் விசாரிக்கையில் அப்பகுதியில் நள்ளிரவு ஏற்பட்ட விபத்து முக்கிய காரணமாக கருதப்படுகிறது. நள்ளிரவு கேஸ் டேங்கர் ஒன்று கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்றபோது ஒரு கார் மீது மோதி அந்த கார் பள்ளத்தில் இறங்கியுள்ளதாகவும் அதை பார்த்து வந்த கிரேன் ஓட்டுநர் தடுப்புகள் மீது மோதி நிலைதடுமாறும் போது இரு சக்கரவாகனத்தின் மீது மோதியதாகவும் கூறப்படுகிறது. விபத்து நிகழ்ந்த இடத்தில் வாகனங்களை அகற்றாத போலீசார் மற்றும் மீட்புப்பணியில் அலட்சியத்தை காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாக பொதுமக்கள் குற்றசாட்டு வைத்தனர். இதனால் பொதுமக்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் 2 மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

The post சென்னையை அடுத்த பனையூரில் இருசக்கர வாகனம் மீது கிரேன் மோதிய விபத்து: இளைஞர் பலி appeared first on Dinakaran.

Tags : Panaiyur ,Chennai ,Panayur ,
× RELATED சென்னை சேப்பாக்கத்தில்...