- அரசினர் கல்லூரி
- கலைஞர்
- முனைவர் கலைஞர் அரசு கலைக் கல்லூரி தமிழ்
- அய்யார்வாதுரை
- அய்யர்மலை
- கலைஞர் அரசு கல்லூரி
குளித்தலை ஆக. 2: அய்யர்மலையில் உள்ள டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரி தமிழாய்வுத்துறை சார்பில் பெற்றோர், ஆசிரியர் கழக கூட்டம் நடைபெற்றது. தமிழாய்வுத்துறை தலைவர் ஜெகதீசன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் பேராசிரியர் ரவிச்சந்திரன் தலைமை வகித்து பேசுகையில், ‘கல்வி, அறிவை வளர்த்து வாழ்வில் உயரசெய்யும். அதேபோல் ஒழுக்கம், மாணவர்களை சமூகத்தில் நன்னடத்தையுடன் உயரச் செய்யும். எனவே, மாணவ, மாணவிகள் கல்வியையும், ஒழுக்கத்தையும் இரு கண்களாக போற்றி செயல்பட வேண்டும். மாணவர்கள் சிறந்த முறையில் படிக்க பெற்றோர் ஊக்கம் அளிக்க வேண்டும்’ என அறிவுறுத்தினார். அதைத்தொடர்ந்து பெற்றோர், ஆசிரியர் கழக பொருளாளர் பேராசிரியர் வேணுகோபால், பேராசிரியர் முருகானந்தம், வைரமுத்து ஆகியோர் பேசினர்.
The post கலைஞர் அரசு கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் appeared first on Dinakaran.