×

சிதம்பரத்தில் தீக்குளித்து பெண் சாவு

சிதம்பரம், ஆக. 2: சிதம்பரம் அடுத்துள்ள லால்புரம் பஞ்சாயத்துக்குட்பட்ட பாலுத்தங்கரை அமிர்தம் நகரை சேர்ந்தவர் குஞ்சிதபாதம். இவருடைய மகள் ரேவதி (55). இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. மேலும் வாய் பேச முடியாமல் ஊமையாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்ணெண்ணை கேனை எடுத்துக்கொண்டு வீட்டு தோட்டத்துக்கு சென்றவர் உடம்பில் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டார். இதில் உடலில் தீ பற்றி எரிந்து ரேவதி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். இதுகுறித்து சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post சிதம்பரத்தில் தீக்குளித்து பெண் சாவு appeared first on Dinakaran.

Tags : Chidambaram ,Kunchitapadam ,Baluthangarai Amritham ,Lalpuram panchayat ,Revathi ,
× RELATED பாஜ தலைவர்கள் கண் மருத்துவரை பார்க்க வேண்டும்: ப.சிதம்பரம் விமர்சனம்