×

வாட்ஸ் அப் வீடியோ காலில் நிர்வாணமாக நின்று பேசு என தொந்தரவு ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் தன்னுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என மிரட்டுகிறார்: இளம் பெண் பாதுகாப்பு கேட்டு டிஜிபியிடம் பரபரப்பு புகார்

சென்னை: வாட்ஸ் அப் வீடியோ அழைப்பில் நள்ளிரவில் நிர்வாணமாக பேச வேண்டும். தன்னுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்று மிரட்டி வரும் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்திடம் இருந்து தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட இளம் பெண் ஒருவர் டிஜிபி அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். சென்னையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் செங்கல்பட்டு மாவட்டம் ஏகாடூர் பகுதியை சேர்ந்த காயத்ரி தேவி என்பவர் நேற்று அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நான் எனது குடும்பத்தோடு செங்கல்பட்டில் வசித்து வருகிறேன். நான், கொடைகானலில் படித்தபோது, அதே பள்ளியில் படித்த நாகபிரியா எனக்கு நெருக்கமான தோழியாக இருந்தார். படிப்பு முடிந்தவுடன் நான் சென்னைக்கு வந்துவிட்டேன். எனினும் செல்போனில் அடிக்கடி பேசுவோம்.

இந்நிலையில், 2014ம் ஆண்டு நாகபிரியாவின் தங்கை திருமண நிகழ்ச்சியில், ஓ.பன்னீர்செல்வம் மகள் கவிதா, மகன் ரவீந்திரநாத் மற்றும் அவரது மனைவி ஆனந்தி வந்தனர். அவர்களை நாகபிரியா எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அதில் இருந்து கவிதா, ஆனந்தி ஆகியோர் நெருங்கிய நட்பில் இருந்தனர். அப்போது, ஆனந்தியின் தோழியான மலரின் நட்பும் கிடைத்தது. அன்று முதல் நான், நாகபிரியா, கவிதா, ஆனந்தி, மலர் ஆகியோர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் போல பழகினோம். இதற்கிடையே ரவீந்திரநாத்துக்கும் அவரது மனைவியின் தோழி மலருக்கும் தவறான தொடர்பு ஏற்பட்டது. எனினும், ஆனந்தி, ரவீந்திரநாத் ஆகியோர் ஒரே வீட்டில் இருந்தாலும் தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், மலர் தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு ரவீந்திரநாத்துடன் வாழ்ந்து வருகிறார்.

இந்த பிரச்னை தொடர்பாக ஆனந்தியிடம் பேசியபோது, ‘‘ரவீந்திரநாத் எம்.பியானது முதல் பெண் சபலம் பிடித்தவராக மாறிவிட்டார். தற்போது ரவிந்திரநாத், மலருடன் குடித்தனம் நடத்தி வருகிறார் என என்னிடம் கூறி வருத்தப்பட்டார். இந்நிலையில், எனது கணவரை 2022ம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டு, பெற்றோருடன் இருந்து வருகிறேன். இந்நிலையில் 2.10.2022ம் தேதி பிற்பகல் 2.16 மணிக்கு ரவீந்திரநாத் செல்போன் எண்ணில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. மறு முனையில் முருகன் என்பவர் பேசினார். அவர், தான் ரவீந்திரநாத் நண்பர் என தன்னை அறிமுகம் செய்து கொண்டார். அப்போது அவர், ரவீந்திரநாத் என் மீது ஆசைப்படுவதாகவும், என்னை ராணி போல் அவர் பார்த்து கொள்வார் எனவும் ஆசை வார்த்தை கூறினார். அதற்கு உடன்பட மறுத்தேன். மேலும், ரவீந்திரநாத் உடன் உடல் உறவு கொள்ள வேண்டும் என வற்புறுத்தினார். அதற்கு உடன் பட மறுத்தால் எனது குடும்பத்தையும் மற்றும் என்னையும் கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்து நான் உடனே ரவீந்திரநாத் மனைவி ஆனந்தியிடம் சொன்னதும், அவர், தனது கணவரிடம் கேட்டபோது, யாராவது தனது செல்போனை பயன்படுத்தி இருப்பார்கள் என்னிடம் தெரிவித்தார் என அவர் என்னிடம் கூறினார். அதன் பிறகு, 1.4.2023 அன்று ரவீந்திரநாத் நேரடியாக தனது செல்போனுக்கு நள்ளிரவு 1.04 மணிக்கு வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டார். ‘நானும் அண்ணன் என்ற முறையில் பேசினேன். ஒரு கட்டத்துக்கு மேல் தவறான கண்ணோட்டத்துடன் பேச தொடங்கினார். என்னை பற்றியும், எனது உடலை பற்றியும் அருவருக்கத்தக்க வகையில் பேசினார்.

எனது கணவரை விவகாரத்து செய்து விட்டதன் காரணமாக, தன்னுடன் உடலுறவில் ஈடுபட வேண்டும் என பேசினார். ‘உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும், நான் உனது வீட்டிற்கு வருகிறேன். இல்லை என்றால் காரை அனுப்புகிறேன். ராணி மாதிரி வா உடலுறவில் ஈடுபடலாம் எனறு 20 முறைக்கு மேல் கேட்டார். நான், உங்கள் தங்கை போன்றவள் என்னிடத்தில், இப்படி பேசாதீர்கள் என திட்டினேன். நான் உங்களிடம் அண்ணன் என்ற முறையிலேயே பழகிவந்தேன். இதுபோன்ற எண்ணத்துடன் என்னை தொடர்பு கொள்ள வேண்டாம் என்று திட்டினேன். உடனே மரியாதையாக நான் சொன்னதை கேட்டு நடக்க வேண்டும். இல்லையென்றால், உன் குடும்பத்தினரை கொன்றுவிடுவேன் என கொலை மிரட்டல் விடுத்தார். அதன் பிறகு அடிக்கடி வாட்ஸ் அப் வீடியோ காலில் தொடர்பு கொண்டு, நிர்வாணமாக பேச வேண்டும் என பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தார்.

எனவே, வயதான தாய் மற்றும் குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் என்னை தனது பதவி மற்றும் பணபலத்தை கொண்டு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி பாலியல் ரீதியாக தனது ஆசைக்கு இணங்கும் படி துண்புறுத்தியும் கொலை மிரட்டல் விடுக்கும் ரவீந்திரநாத் மற்றும் அவரது நண்பர் முருகன் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், எனக்கும் எனது குடும்பத்துக்கும் பாதுகாப்பு வழங்கும் படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. ரவீந்திரநாத் எம்.பியானது முதல் சபலம் பிடித்தவராக மாறிவிட்டார். தற்போது அவர் மலருடன் குடித்தனம் நடத்தி வருகிறார்.

The post வாட்ஸ் அப் வீடியோ காலில் நிர்வாணமாக நின்று பேசு என தொந்தரவு ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் தன்னுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என மிரட்டுகிறார்: இளம் பெண் பாதுகாப்பு கேட்டு டிஜிபியிடம் பரபரப்பு புகார் appeared first on Dinakaran.

Tags : OPS ,Ravindranath ,DGP ,CHENNAI ,WhatsApp ,Dinakaran ,
× RELATED ஒரிஜினலை ரவுண்டு கட்டும் டூப்ளிக்கேட்டுகள்: ‘OPS’களின் அட்ராசிட்டி