×

செய்துங்கநல்லூர் அருகே மக்கள் நலப்பணியாளர் டிப்பர் லாரி மோதி பலி ரிவர்ஸ் பார்த்தபோது பரிதாபம்

செய்துங்கநல்லூர், ஆக .1: வல்லநாட்டில் டிப்பர் லாரி மோதி மக்கள் நலப் பணியாளர் பலியானார். செய்துங்கநல்லூர் அருகே உள்ள நாட்டார்குளம் வடக்குத்தெருவை சேர்ந்தவர் ராமசுப்பு (56). இவர், நாட்டார்குளம் கிராமத்தில் மக்கள் நலப் பணியாளராக பணியாற்றி வந்தார். நேற்று இவர், தனது மகன் காசிமணியுடன் வல்லநாட்டுக்கு சென்றுவிட்டு மீண்டும் நாட்டார்குளத்திற்கு வந்துள்ளார். பாறைக்காடு வழியாக சாலையில் நடந்து செல்லும்போது அப்பகுதியில் நடைபெறும் சாலை பணிக்காக டிப்பர் லாரி ஜல்லி ஏற்றி வந்தது. லாரி ஓட்டுநர், ராமசுப்புவுக்கு தெரிந்தவர் என்பதால் லாரி பின்பக்கம் வருவதற்கு சைடு பார்த்துள்ளார். அப்போது திடீரென டிப்பர் லாரி பின்பக்க சக்கரம் எதிர்பாராதவிதமாக ராமசுப்பு காலில் ஏறியது. இதில் பலத்த காயமடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து முறப்பநாடு இன்ஸ்பெக்டர் தில்லைராஜன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post செய்துங்கநல்லூர் அருகே மக்கள் நலப்பணியாளர் டிப்பர் லாரி மோதி பலி ரிவர்ஸ் பார்த்தபோது பரிதாபம் appeared first on Dinakaran.

Tags : Karinganallur ,Karadanganallur ,Vallanath ,Natarkulam ,Kardanganallur ,Bali Rivers ,Dinakaran ,
× RELATED சிங்கத்தாகுறிச்சி சுகாதார...