×

மதுரை விமான நிலையத்தில் பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழா

அவனியாபுரம். ஆக. 1: மதுரை விமான நிலையத்தில் ஒன்றிய விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் விமான நிலைய பாதுகாப்பு பணியகம் சார்பில் பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் கலாச்சார வார விழா நேற்று தொடங்கியது மதுரை விமான நிலைய இயக்குநர் முத்துக்குமார், விமான நிலைய பாதுகாப்பு முதன்மை அதிகாரி கணேசன், மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டன்ட் விஸ்வநாதன். முனைய துணை பொது மேலாளர் ஜானகிராமன், மேலாளர் ஷ்யாம்குமார் மற்றும் விமான நிலைய ஊழியர்கள், விமான நிறுவன அலுவலர்கள், மத்திய தொழில் நிறுவன பாதுகாப்பு படையினர் பங்கேற்றனர்.

இதில் விமான நிலைய பாதுகாப்பு மற்றும் பயணிகளை வழிநடத்தும் விதிகள், பயணிகள் விமான பயணத்தின் போது செயல்படும் விதம், தடைசெய்யப்பட்ட ஆயுதம் மற்றும் விமானத்தில் கொண்டு செல்ல தடை செய்யப்பட்ட பொருட்கள் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது. பின்னர் அனைவரும் விமான நிலைய பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

விமான நிலைய பாதுகாப்பு உறுதிமொழியுடன் துவங்கி வரும் 6ம் தேதி வரை மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களின் பல்வேறு சாதனைகள், மோப்பநாய்களின் தனித்திறன் மற்றும் விமான நிறுவன ஊழியர்களின் கலாச்சார நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் உள்ளிட்டவை நடைபெற இருக்கிறது. முடிவில் ஏர் இந்தியா விமான நிறுவன பாதுகாப்பு அதிகாரி செளமியா நன்றி கூறினார்.

The post மதுரை விமான நிலையத்தில் பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழா appeared first on Dinakaran.

Tags : Security Awareness Week Ceremony ,Madurai Airport ,Avaniyapuram ,Union Ministry of Aviation ,Bureau of Airport Security ,Security Awareness Week ,Dinakaran ,
× RELATED துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.56...