×

பைக், பஸ் மோதி பொரி வியாபாரி பலி

 

பல்லடம், ஆக.1: பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுருநாதன் (35). இவர் பொரி வியாபாரம் செய்து வந்தார். இவர் மோட்டார் பைக்கில் பல்லடம் நால்ரோடு சந்திப்பில் பொள்ளாச்சி ரோட்டில் இருந்து காந்தி ரோட்டுக்கு செல்வதற்காக சென்றார். அப்போது மதுரையில் இருந்து கோவை நோக்கி செல்லும் அரசு பஸ் எதிர்பாராத விதமாக இவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அங்கிருந்த போக்குவரத்து போலீசார் மற்றும் பொதுமக்கள் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பலியானார்.

The post பைக், பஸ் மோதி பொரி வியாபாரி பலி appeared first on Dinakaran.

Tags : Pori ,Palladam ,Selvagurunathan ,Vadukapalayam ,Dinakaran ,
× RELATED பல்லடத்தில் கோடை வெயிலால் காய்ந்த...