×

ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க மக்கள் கோரிக்கை

 

ஆர்.எஸ்.மங்கலம், ஆக.1: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள கடலூர் ஊராட்சியில் உப்பூர், மோர்ப்பண்ணை, நாகனேந்தல், காவனூர், அத்தானூர், அடந்தனார்கோட்டை, ஊரணங்குடி, வெட்டுக்குளம், சித்தூர்வாடி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இல்லை. இதனால் இப்பகுதி பொதுமக்கள் மருத்துவ வசதி கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள், கர்ப்பிணி பெண்கள் என அனைவரும் முதலுதவி சிகிச்சைக்கு ஆர்.எஸ்.மங்கலம் அல்லது ராமநாதபுரம் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் நடைபெறும் சாலை விபத்தில் சிக்கியவர்களை கூட அவசர கால சிகிச்சைக்கு ராமநாதபுரம் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே இப்பகுதி மக்களின் நலன் கருதி உப்பூர் பகுதியில் ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : RS Mangalam ,Uppur ,Morpannai ,Naganendal ,Kavanur ,Atthanur ,Adantanarkottai ,Oranangudi ,Cuddalore ,
× RELATED ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் கரும்பு ஜூஸ், இளநீர் விற்பனை ஜோரு