×

பட்டாசுகள் பறிமுதல்

ஏழாயிரம்பண்ணை, ஆக.1: வெம்பக்கோட்டை காவல் ஆய்வாளர் நம்பிராஜன் மற்றும் சார்பு ஆய்வாளர் வெற்றி முருகன் தலைமையில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கங்காரக்கோட்டை பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையை சோதனை செய்தனர். அங்கு அச்சங்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெகன்குமார்(30) என்பவர் சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்து வைத்திருந்தது தெரியவந்தது.அவரிடம் இருந்து சுமார் ரூ.15000 மதிப்புள்ள வெடி பொருட்களை பறிமுதல் செய்தனர். இருவர் மீது வழக்கு பதிவு செய்து ஜெகன்குமாரை கைது செய்தனர். மேலும் ஆலை உரிமையாளர் கீழச்செல்லையாபுரம் சுந்தரமூர்த்தி என்பவரை தேடி வருகின்றனர்.

The post பட்டாசுகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Ejayarampannai ,Vembakottai ,Nambirajan ,Vetri Murugan ,Dinakaran ,
× RELATED வெம்பக்கோட்டை அருகே பன்றிகளை திருடியதாக 4 பேர் மீது வழக்குப்பதிவு