×

திருவள்ளூர் அருகே மூதாட்டியிடம் செயின் அபேஸ்: மர்ம நபர்களுக்கு வலை

திருவள்ளூர்: மூதாட்டியிடம் மர்ம நபர்கள் செயின் பறித்து சென்றனர். திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் கண்ணையா நகர் பகுதியை சேர்ந்தவர் சிவமூர்த்தி. இவரது மனைவி அலமேலு(63). இவர், நேற்று முன்தினம் பட்டரை கிராமத்தில் உள்ள விநாயகர் கோயில் நடந்த கும்பாபிஷேக விழாவை கண்டுகளிக்க சென்றார். கூட்டம் அதிகமாக இருந்தது. பின்னர், கும்பாபிஷேக விழாவை பார்த்துவிட்டு, வரிசையில் காத்திருந்து அன்னதானம் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்றார். சிறிது நேரம் கழித்து பார்த்தபோது கழுத்தில் அணிந்திருந்த இரண்டரை சவரன் செயின் காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்தார். புகாரின் பேரில், மணவாளநகர் போலீசார் வழக்கு பதிந்து, செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

The post திருவள்ளூர் அருகே மூதாட்டியிடம் செயின் அபேஸ்: மர்ம நபர்களுக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Chain Abbey ,Thiruvallur ,Moothati ,Tiruvallur ,Sivamurthy ,Kannaiya Nagar ,Manavalanagar ,Tiruvallur.… ,Chain Abbess ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள...