×

திமுக நெசவாளர் அணி அமைப்பாளர் அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் வாழ்த்து

வத்தலக்குண்டு, ஜூலை 31: திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக நெசவாளர் அணி அமைப்பாளராக கோம்பைபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மேலக்கோவில்பட்டியை சேர்ந்த ஜெயராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரும், திமுக துணை பொதுச் செயலாளருமான ஐ.பெரியசாமியை திண்டுக்கல்லில் நேரில் சந்தித்து ஜெயராஜ் வாழ்த்து பெற்றார். அதேபோல் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும் பழநி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமாரையும் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அப்போது ஜெயராஜ் தன்னை மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளராக நியமனம் செய்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் பரிந்துரை செய்த அமைச்சர் ஐ.பெரியசாமி, மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். கிழக்கு மாவட்ட சிறுபான்மை நல உரிமை பிரிவு துணை அமைப்பாளர் பிரான்சிஸ், மேல கோவில்பட்டி கிளைச் செயலாளர் தென்னவன், கோம்பைபட்டி ஒன்றிய கவுன்சிலர் ரகு, வத்தலக்குண்டு ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர் விவேக், திமுக நிர்வாகிகள் ஜெர்மன் ராஜ், சவரி ராஜ், தேவதாஸ், கென்னடி, ஆரோக்கியராஜ், தொ.மு.ச அன்பழகன், கௌதம், மாவட்ட தொமுச செயலாளர் தமிழரசு உள்பட பலர் உடனிருந்தனர்.

The post திமுக நெசவாளர் அணி அமைப்பாளர் அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Minister ,I. Periyasamy ,DMK weavers ,Wattalakundu ,Dindigul East District ,DMK weaver ,Melakovilpatti ,Gombaipatti ,DMK ,Dinakaran ,
× RELATED ஐ.பெரியசாமி மீதான வழக்கு விசாரணைக்கு தடை