×

மேலூர் அருகே சிவாலயத்தில் பிரதோஷ வழிபாடு

மேலூர், ஜூலை 31: மேலூர் அருகே சிவாலயத்தில் மழை பெய்து, விவசாயம் செழிக்க வேண்டி சிறப்பு பிராத்தனைகளுடன் வளர்பிறை பிரதோஷ வழிபாடு நேற்று நடைபெற்றது. மேலூர் அருகே தும்பைப்பட்டி சிவாலயபுரத்தில் அமைந்துள்ள சங்கரலிங்கம், சங்கரநாராயணசுவாமி, கோமதியம்மாள் கோயிலில் ஆடி மாத வளர்பிறை பிரதோஷ வழிபாடு நேற்று நடைபெற்றது. விவசாயம் செழிக்கவும், மக்கள் நோய் நொடியின்றி வாழவும் வேண்டி நடைபெற்ற இவ்விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக சங்கரலிங்கம் சுவாமிக்கும், நந்தியம் பெருமாளுக்கும் எண்ணெய் காப்பு சாற்றி, பதினாறு வகையான மங்கல பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. சங்கரலிங்கம் சுவாமியும், நந்தியம் பெருமாளும் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். பிரதோஷ மூர்த்திகள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, கோயிலைவலம் வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினர்.

பக்தர்கள் சிவ புராணம், தேவாரம், திருவாசகம் உள்ளிட்டவற்றை பாராயணம் செய்தனர். இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ராஜேஷ் அர்ச்சகர் மற்றும் சங்கரநாராயணர் கோயில் கல்வி, அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

The post மேலூர் அருகே சிவாலயத்தில் பிரதோஷ வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Shiwalaya ,Malore ,Malur ,Shiwalayam ,Prathosh ,
× RELATED மேலூர் அருகே இன்று அதிகாலை பள்ளத்தில்...