×

பலன் தராத பரிசோதனை முயற்சி: வெ.இண்டீசிடம் பணிந்தது இந்தியா

பிரிட்ஜ் டவுன்: வெஸ்ட் இண்டீஸ்-இந்தியா இடையே 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் நடக்கிறது. முதல் ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. அதனால் இந்தியா 1-0 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலைப் பெற்றது.தொடர்ந்து நடைப்பெற்ற 2வது ஒருநாள் ஆட்டம் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை முடிந்தது. பிரிட்ஜ் டவுனில் நடந்த இந்த ஆட்டத்தில், இ்்்்்ந்தியா 40.5ஓவரில் 181ரன்னில் சுருண்டது.அதனையடுத்து 182 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் வெ.இண்டீஸ் களம் கண்டது. அந்த அணியின் கேல் மேயர்ஸ் 36ரன்னில் ஆட்டழந்தார்.

அதே நேரத்தில் கேப்டன் ஷாய் ஹோப் 63, கேசி சார்டி 48ரன்னுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இலக்கை எட்டினர். எனவே வெ.இண்டீஸ் 36.4ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 182 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை சுவைத்தது. இந்திய வீரர் ஷர்துல் 3விக்கெட் எடுத்தார்.விரைவில் உலக கோப்பை போட்டி நடைபெற உள்ள நிலையில் ஒருநாள் தொடரில் பல்வேறு பரிசோதனை முயற்சிகளில் இந்தியா இறங்கியுள்ளது. முதல் ஆட்டத்தில் முன்வரிசையில் புதுமுக வீரர்களை களமிறக்கியது. வென்றாலும் 114என்ற இலக்கை எட்ட இந்தியா 5 விக்கெட்களை இழந்தது.

அந்த பரிசோதனை முயற்சி 2வது ஆட்டத்திலும் தொடர்ந்தது. கோஹ்லி, ரோகித் வெளியில் உட்கார வைக்கப்பட்டனர். கூடவே அரிதாக வாய்ப்பை பெற்ற சஞ்சு சாம்சன், அக்சர் படேல், சூரியகுமார் ஆகியோரை வரிசை மாற்றி விளையாட வைத்தனர். விளைவு இந்தியா தோற்றது. டிராவிட்-ரோகித் பரிசோதனை முயற்சிகள் பலன் தரவில்லை.எப்படி இருந்தாலும் மீண்டும் ஆட்டத்திறனு்க்கு திரும்பியுள்ள வெ.இண்டீஸ் 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை 1-1 என்ற கணக்கில் சமநிலைக்கு கொண்டு வந்தது. கூடவே வெ.இண்டீஸ் 2019ம் ஆண்டு சென்னையில் நடந்த ஆட்டத்துக்கு பிறகு இப்போதுதான் இந்தியாவை வீழ்த்தியுள்ளது. யாருக்கு தொடர் வெற்றி என்பதை முடிவுச் செய்யும் கடைசி ஒருநாள் ஆட்டம் டிரினிடாட்டில் நாளை நடக்கிறது.

The post பலன் தராத பரிசோதனை முயற்சி: வெ.இண்டீசிடம் பணிந்தது இந்தியா appeared first on Dinakaran.

Tags : India ,V. ,Indies ,Bridgetown ,West Indies ,Dinakaran ,
× RELATED மத்தியப்பிரதேசத்தில் ஹேண்ட் பிரேக்...