×

7 செயற்கை கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-56 ராக்கெட்..!

ஸ்ரீஹரிகோட்டா: ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து பி.எஸ்.எல்.வி. சி-56 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. சிங்கப்பூர் நாட்டுக்கு சொந்தமான 360 கிலோ எடை கொண்ட ‘டிஎஸ்-சாட்’ என்ற பிரதான செயற்கை கோள் உள்பட 7 செயற்கை கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., மற்றும் எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தி வருகிறது. அந்தவகையில் இன்று காலை 6.30 மணிக்கு, முதல் ஏவுதளத்தில் இருந்து ‘பி.எஸ்.எல்.வி. சி-56’ ராக்கெட் விண்ணில் ஏவபட்டத்து. இதில் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த 360 கிலோ எடை கொண்ட ‘டிஎஸ்- சாட்’ என்ற பிரதான செயற்கைக்கோள் அனுப்பப்படுகிறது. இந்த செயற்கைக்கோள் பூமியில் இருந்து 5 டிகிரி சாய்வில் 535 கி.மீ. உயரத்தில் பூமத்திய ரேகை சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.

இந்த ‘டிஎஸ்- சாட்’ என்ற பிரதான செயற்கைக்கோளை டிஎஸ்டிஏ (சிங்கப்பூர் அரசு) மற்றும் எஸ்.டி., இன்ஜினியரிங் இடையேயான கூட்டாண்மையின் கீழ் உருவாக்கப்பட்டது. இந்த செயற்கைக்கோள் உடன் 6 செயற்கைக்கோள் இந்த ராக்கெட்டில் பொருத்தப்பட்டு விண்ணுக்கு ஏவப்படுகிறது. 23 கிலோ எடை கொண்ட ‘விகிலேக்ஸ்- ஏஎம்’ என்ற தொழில்நுட்ப விளக்க மைக்ரோ செயற்கைக்கோள், ‘ஆர்கேட்’ என்ற வளிமண்டல இணைப்பு மற்றும் இயக்கவியல் செயற்கைக்கோள், ‘எக்ஸ்ப்ளோரர்’ என்ற ஒரு சோதனை செயற்கைக்கோள், ‘ஸ்கூப்-2’ என்ற 3யு நானோ செயற்கைக்கோள், கலாசியா-2 என்ற மற்றொரு 3யு நானோ செயற்கைக்கோள் மற்றும் ஓஆர்பி-12 ஸ்ட்ரைடர் செயற்கைக்கோள் ஆகிய 6 செயற்கைக்கோள் ஏவப்படுகிறது.

இந்த ‘டிஎஸ்- சாட்’ செயற்கைக்கோள் ‘இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ்’ (ஐ.ஏ.ஐ) உருவாக்கிய செயற்கை துளை ரேடார் கருவியை கொண்டுள்ளது. எனவே அனைத்து வானிலை தகவல்களையும், துல்லியமான படங்களையும் வழங்கும் என தெரிவிக்கபட்டுள்ளது.

The post 7 செயற்கை கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-56 ராக்கெட்..! appeared first on Dinakaran.

Tags : Srihrikota ,Srihrikotta ,S.S. ,Singapore ,
× RELATED கருப்பு பணத்தை மீட்கவில்லை,...