×

₹5 கோடி ேமாசடி செய்த அரசு பள்ளி ஆசிரியர் கைது பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை ஆரணி அருகே ஏலச்சீட்டு நடத்தி தலைமறைவு

திருவண்ணாமலை, ஜூலை 30: ஆரணி அடுத்த களம்பூர் பகுதியில் மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி ₹5 கோடிக்கும் அதிகமான ெதாகையை ேமாசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில், தலைமறைவாக இருந்த ஆசிரியரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த களம்பூர் பகுதியைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர்களான சங்கர் மற்றும் அவரது மனைவி மாதவி ஆகியோர் கடந்த சில ஆண்டுகளாக மாத ஏலச்சீட்டு நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும், ₹1 லட்சம் முதல் ₹10 லட்சம் வரை ஏலச்சீட்டு நடத்தியுள்ளனர். அதில், களம்பூர், ஆரணி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் பணத்தை செலுத்தியுள்ளனர். இந்நிலையில், ஏலச்சீட்டை முறையாக நடத்தாததால், பணம் செலுத்தியவர்களுக்கு உரிய காலத்தில் தொகையை வழங்க முடியாமல் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

எனவே, முதிர்ச்சியடைந்த சீட்டுத்தொகையை கேட்டு பலரும் நெருக்கடி கொடுத்துள்ளனர். ஆனால், சீட்டுப் பணத்தை திரும்ப தர முடியாத சங்கர், அவரது மனைவி மாதவி ஆகியோர் தலைமறைவாகிவிட்டதாக தெரிகிறது. அதனால், பாதிக்கப்பட்ட நபர்கள் ஏற்கனவே போலீசில் புகார் மனு அளித்துள்ளனர். ஆனாலும், சீட்டு நடத்தியவர்களை கண்டுபிடிப்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டதாக தெரிகிறது. எனவே, சீட்டு பணம் செலுத்தி ஏமாற்றம் அடைந்தவர்கள், திருவண்ணாமலையில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தை கடந்த மே மாதம் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ₹5 கோடிக்கும் அதிகமான தொகையை சீட்டு நடத்தியவர்கள் ஏமாற்றிவிட்டதாக குற்றம் சாட்டினர். அதைத்தொடர்ந்து, தலைமறைவானவர்களை தேடும் பணியில் தீவிரம் காட்டினர். ஆனாலும், அவர்களை கண்டுபிடிப்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆசிரியர் சங்கர் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விரைந்துச் சென்று நேற்று அதிகாலை சங்கரை கைது செய்தனர். பின்னர், திருவண்ணாமலைக்கு அழைத்துவரப்பட்ட சங்கரை, மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நேற்று மாலை சிறையில் அடைத்தனர். மேலும், மோசடி புகாரில் இடம் பெற்றுள்ள அவரது மனைவி மாதவியை தேடி வருகின்றனர்.

The post ₹5 கோடி ேமாசடி செய்த அரசு பள்ளி ஆசிரியர் கைது பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை ஆரணி அருகே ஏலச்சீட்டு நடத்தி தலைமறைவு appeared first on Dinakaran.

Tags : Economic Offenses Division ,Arani ,Tiruvannamalai ,Kalampur ,
× RELATED ஆரணி அருகே அழிந்த கோட்டையின் தடயங்கள் கண்டுபிடிப்பு