×

என்எல்சி போராட்டத்தில் வன்முறை 2 சிறுவர்கள் உள்பட பாமகவினர் 28 பேர் கைது

நெய்வேலி: நெய்வேலியில் பாமக நடத்திய முற்றுகை போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக 2 சிறுவர்கள் உள்ளிட்ட 28 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனம் கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் வளையமாதேவி உள்ளிட்ட பகுதியில் உள்ள விளைநிலங்களில் வாய்க்கால் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் பாமகவினர் நெய்வேலி என்எல்சி ஆர்ச் கேட் எதிரில் உள்ள நுழைவாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து முற்றுகையிட சென்ற அன்புமணியை கைது செய்தபோது வன்முறை வெடித்தது. இதில் போலீசார் மீது பாமகவினர் கல், கட்டைகளை வீசி தாக்கினர். இன்ஸ்பெக்டர் உள்பட 20 போலீசார் படுகாயமடைந்தனர். அன்புமணி உள்பட 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து விடுதலை செய்தனர்.

பாதுகாப்பு பணிக்கு வந்த 3 காவல் வாகனங்களின் கண்ணாடிகளை கல்லால் அடித்து உடைத்து சேதப்படுத்தியதாக நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்கு பதிந்து வெங்கடாம்பேட்டை சுபாஷ் (21), நெய்வேலி வட்டம் 29 பகுதியை சேர்ந்த வித்தியாசாகர் (29), தொப்புளிக்குப்பம் ராஜாமணி (48), பெரிய கண்ணாடி தர்மராஜ் (21), முத்துகிருஷ்ணாபுரம் மணிமாறன் (19), பேர்பெரியாங்குப்பம் ஏழுமலை (32), துளாங்குறிஞ்சி கார்த்திக் (26) உள்ளிட்ட 26 பேரை நேற்று முன்தினம் இரவு நள்ளிரவு கைது செய்து, நெய்வேலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் ஆத்தூர் செல்லியம்மன் நகர், கரமேடை சேர்ந்த 2 சிறுவர்களை கைது செய்து கடலூர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.

The post என்எல்சி போராட்டத்தில் வன்முறை 2 சிறுவர்கள் உள்பட பாமகவினர் 28 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : NLC ,Neyveli ,BAMKA ,
× RELATED பைக் மோதி டெய்லர் பலி