×

களக்காடு அருகே கோயிலுக்கு சொந்தமான 50 ஏக்கர் நிலம் மீட்பு

களக்காடு: நெல்லை மாவட்டம் களக்காடு அருகே சிங்கிகுளத்தில் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான 50 ஏக்கர் நிலம் இந்து சமய அறநிலையத்துறையால் மீட்கப்பட்டது. தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி வந்தபிறகு இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டம் களக்காடு அருகே சிங்கிகுளத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த வரதராஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான 50 ஏக்கர் நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.

அதன் பின்னர் 22 ஏக்கர் நிலம் பொது ஏலத்தின் மூலம் குத்தகைக்கு விடப்பட்டது. மீதமுள்ள 28 ஏக்கர் நிலமானது திருக்கோயிலின் நேரடி சுவாதீனத்திற்கு எடுக்கப்பட்டு மீண்டும் மறு பொது ஏலத்திற்கு விட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று இந்து சமய அறநிலையத்துறையினர் தெரிவித்தனர்.

The post களக்காடு அருகே கோயிலுக்கு சொந்தமான 50 ஏக்கர் நிலம் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Kalakadu ,Kalakkadu ,Varadaraja Perumal ,Singikulam ,Nellai district ,
× RELATED ராசிபுரம் ஸ்ரீ பொன் வரதராஜ பெருமாள்...