×

கள்ளிக்குடியில் கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட மூவர் கைது

திருமங்கலம், ஜூலை 29: கள்ளிக்குடியில் பணிக்கு சென்று இரவு வீடு திரும்பியவர்களை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணத்தை வழிப்பறி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். கள்ளிக்குடி அருகேயுள்ள லாலாபுரத்தினை சேர்ந்தவர் அருண்பாண்டியன் (25). இவர், விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் ஏசி மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பணியை முடித்து விட்டு வீட்டிற்கு டூவீலரில் திரும்பினார். கள்ளிக்குடி- டி.கல்லுப்பட்டி ரோட்டில் வடக்கம்பட்டி பிரிவு அருகே வந்த போது எதிரே 3 பேர் இவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்துள்ளனர்.

இதேபோல் கள்ளிக்குடி காமாட்சிபுரத்தினை சேர்ந்தவர் சரவணன்(38). சிவகாசியில் லோடு மேனாக பணிபுரிந்து வருகிறார். வில்லூரில் வசித்து வருகிறார். இவரும் நேற்று முன்தினம் பணி முடித்து வில்லூர் நோக்கி டூவீலரில் சென்ற போது அதே 3 பேர் வழிமறித்து பணத்தினை பறித்துள்ளனர். அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் குறித்த இவர்கள் இருவரும் அங்கிருந்த பொதுமக்கள் சிலரிடம் கூறினர்.

இதைடுத்து அப்பகுதி மக்கள் திரண்டு வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரையும் மடக்கி பிடித்து கள்ளிக்குடி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் அவர்கள் விருதுநகர் ஆலம்பட்டியை சேர்ந்த பிரவீன்குமார் (19), மாரிஸ்வரன் (21), 18 வயது நபர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து பணத்தினை மீட்டனர்.

The post கள்ளிக்குடியில் கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட மூவர் கைது appeared first on Dinakaran.

Tags : Kallikudi ,Thirumangalam ,Jallikudi ,
× RELATED திருமங்கலம் பகுதியில்...