×

கேரள அரசின் மழைக்கால பம்பர் லாட்டரியில் தூய்மை பணியாளர்கள் 11 பேருக்கு ரூ.10 கோடி முதல் பரிசு

திருவனந்தபுரம்: கேரள அரசின் மழைக்கால பம்பர் லாட்டரி குலுக்கல் கடந்த 2 தினங்களுக்கு முன்பு நடந்தது. இதன் முதல் பரிசு ரூ.10 கோடி ஆகும். இந்தநிலையில் முதல் பரிசு மலப்புரம் மாவட்டம் பரப்பனங்காடி நகரசபையில் பணி புரிந்து வரும் கார்த்தியாயினி, ராதா, ஷீஜா, சந்திரிகா, பார்வதி, குட்டிமாளு, லட்சுமி, லீலா, ஷோபா, பேபி, பிந்து ஆகிய 11 பெண் தூய்மையாளர்கள் சேர்ந்து எடுத்த டிக்கெட்டுக்கு கிடைத்தது தெரிய வந்துள்ளது. இவர்கள் அந்த பகுதியிலுள்ள வீடுகளுக்கு சென்று பிளாஸ்டிக் உள்பட குப்பைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இதற்காக ஒவ்வொரு வீடுகளில் இருந்தும் மாதம் ரூ.100 வசூலித்து வருகின்றனர். இதில் ஒவ்வொருவருக்கும் மாதத்திற்கு ரூ.6 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை மட்டுமே சம்பளம் கிடைக்கும்.ஒரு லாட்டரி டிக்கெட் விற்பனைக்காரர், மழைக்கால பம்பர் லாட்டரி வேண்டுமா? என்று அவர்களிடம் கேட்டார். அனைவரும் சேர்ந்து ஒரு டிக்கெட்டை வாங்கினர். அந்த டிக்கெட்டுக்குத் தான் தற்போது முதல் பரிசு ரூ.10 கோடி கிடைத்து உள்ளது. ஏஜென்ட் கமிஷன், வரி நீங்கலாக இவர்களுக்கு ரூ.6.3 கோடி பணம் கிடைக்கும்.

The post கேரள அரசின் மழைக்கால பம்பர் லாட்டரியில் தூய்மை பணியாளர்கள் 11 பேருக்கு ரூ.10 கோடி முதல் பரிசு appeared first on Dinakaran.

Tags : Rainy ,Government of Kerala ,Thiruvananthapuram ,Kerala government ,rainy bumper lottery shake ,Raintime ,Dinakaran ,
× RELATED நாகர்கோவில் – கன்னியாகுமரிக்கு இரவு நேர பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுமா?