×

கேரளாவில் தூய்மை பணியாளர்கள் 11 பேர் இணைந்து வாங்கிய ஒரு லாட்டரியில் ரூ.10 கோடி பரிசு: 11 பேரும் இன்ப அதிர்ச்சி

திருவனந்தபுரம்: கேரளாவில் தூய்மை பணியாளர்கள் 11 பேர் இணைந்து வாங்கிய ஒரு லாட்டரி சீட்டுக்கு பம்பர் பரிசாக ரூ.10 கோடி கிடைத்துள்ளது. மலப்புரம் மாவட்டத்தில் பரப்பனங்காடி பகுதியை சேர்ந்த பிந்து, லீலா, லட்சுமி, சந்திரிகா உள்ளிட்ட 11 பேர் தூய்மை பணியாளர்களாக உள்ளனர். கேரள அரசின் லாட்டரி சீட்டுகள் வழங்குவதை வழக்கமாக கொண்டிருந்த அவர்கள் மழைக்கால சிறப்பு விற்பனை லாட்டரியை வாங்க முடிவெடுத்தனர்.

10 பேர் சேர்ந்து 1 லாட்டரி சீட்டை வாங்க எண்ணிய போது பணம் குறைவாக இருந்ததால் 11-வது நபராக மற்றொரு பணியாளரையும் சேர்த்து ரூ.250-க்கு வாங்கியுள்ளனர். இந்த நிலையில் தாங்கள் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு பம்பர் பரிசாக ரூ.10 கோடி விழுந்ததை அறிந்த 11 பேரும் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். ரூ.10 கோடியை சமமாக பங்கீட்டு கொள்ள 11 பேரும் முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் தங்களின் கடன்களை திருப்பி செலுத்தி வறுமையில் இருந்து மீள முடியும் என்று அவர்கள் தெரிவித்தனர். சிலர் தூய்மை பணியாளர் பணியை தொடர்வோம் என்றும் தெரிவித்தனர்.

The post கேரளாவில் தூய்மை பணியாளர்கள் 11 பேர் இணைந்து வாங்கிய ஒரு லாட்டரியில் ரூ.10 கோடி பரிசு: 11 பேரும் இன்ப அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Kerala ,Thiruvananthapuram ,Dinakaran ,
× RELATED மனைவி பிரிந்ததால் வேதனை; தற்கொலையை...