×

கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு காவிரியில் 21,300 கன அடி நீர் திறப்பு

பெங்களூரு: கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு காவிரியில் 21,300 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கபினி அணையில் இருந்து நீர் திறப்பு விநாடிக்கு 20,000 கன அடி நீரும் கே.ஆர்.எஸ். அணையிலிருந்து 1,300 கனஅடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. கபினி அணைக்கு நீர்வரத்து 20,102 கன அடியாக உள்ள நிலையில் கூடுதலாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கபினி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தால் மேலும் நீர் வெளியேற்றத்தை அதிகரிக்க கர்நாடக அதிகாரிகள் திட்டமிட்டுள்ளது.

The post கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு காவிரியில் 21,300 கன அடி நீர் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Kaviri ,Tamil Nadu ,Bengaluru ,K.K. ,Kabini ,Karnataka, K. R.R. S.S. ,Dinakaran ,
× RELATED தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேகதாது...