×

தூத்துக்குடி பள்ளிகளில் 339 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

தூத்துக்குடி, ஜூலை 28: தூத்துக்குடியில் பள்ளி மாணவர்கள் 339 பேருக்கு அமைச்சர் கீதாஜீவன் இலவச சைக்கிள் வழங்கினார். தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். ரெங்கநாதபுரம் சி.எம். மேல்நிலைப்பள்ளியில் 66 பேர், காரப்பேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 253 பேர், சி.வ.அரசு மேல்நிலைப்பள்ளியில் 20 பேர் என மொத்தம் 339 மாணவ- மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.

இதில் திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநில மீனவரணி துணை செயலாளர் புளோரன்ஸ், தமிழ்நாடு மீனவர் நலவாரிய இயக்குநர் அந்தோணி ஸ்டாலின், மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், கவுன்சிலர் சுரேஷ்குமார், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், சிஎம் பள்ளி தாளாளர் வள்ளியம்மாள்திருச்சிற்றம்பலம், தலைமையாசிரியர் சங்கரேஸ்வரி, முன்னாள் கவுன்சிலர் கந்தசாமி, தலைமையாசிரியர் லதா, சிவ அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை பெர்சியாள்ஞானமணி, உதவி தலைமையாசிரியர் வெள்ளைச்சாமி, உடற்கல்வி ஆசிரியர் அருள்சகாயம், வட்ட செயலாளர் கீதா செல்வமாரியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post தூத்துக்குடி பள்ளிகளில் 339 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் appeared first on Dinakaran.

Tags : Tutukudi Schools ,Thoothukudi ,Minister ,Gitajivan ,Tutukudi Assembly ,
× RELATED தூத்துக்குடி பொட்டலூரணி கிராமத்தில்...