×

திருவெண்ணெய்நல்லூர், செஞ்சியில் 12 பவுன் நகை கொள்ளை

திருவெண்ணெய்நல்லூர், ஜூலை 28: திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள தென்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மாசிலாமணி மகன் சிவசங்கர். கொத்தனார் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவரது மனைவி ஜெயந்தி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நேற்று முன்தினம் பண்ருட்டி அருகே கருக்கை கிராமத்தில் உள்ள குல தெய்வ கோயிலுக்கு சென்றுள்ளார். பின்னர் மீண்டும் நேற்று காலை வீடு திரும்பினார். அப்போது வீட்டிலிருந்த பீரோவின் பூட்டு உடைக்கப்பட்டு தாலி செயின், நெக்லஸ் உள்ளிட்ட 6 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி கொலுசு மற்றும் 5 ஆயிரம் ரொக்கப்பணம் உள்ளிட்டவை திருடுபோனது கண்டு அதிர்ச்சியடைந்தார். சிவசங்கர் வெளியூர் செல்வதை நோட்டமிட்டு மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இது குறித்து சிவசங்கர் அளித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

செஞ்சி: செஞ்சி அருகே வீட்டில் இருந்த பீரோவை உடைத்து 6 பவுன் நகை மற்றும் ஒரு லட்சத்து 18 ஆயிரம் பணம் கொள்ளை அடித்து செல்லப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். செஞ்சி அடுத்த புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் இவரது மனைவி திவ்யா (26), இவருடைய கணவர் சொந்த வேலையா வெளியூர் சென்றுவிட்ட நிலையில் திவ்யா வீட்டை மூடிவிட்டு ஏரி வேலைக்கு சென்றுள்ளார். வேலை முடிந்து திவ்யா மீண்டும் மதியம் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பீரோ உடைந்து கிடந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தபோது மூன்று பவுன் நெக்லஸ், முக்கால் பவுன் மோதிரங்கள் 3 உள்ளிட்ட தங்க நகைகள் மொத்தம் 6 பவுன் மற்றும் ரூபாய் ஒரு லட்சத்து 18 ஆயிரம் ரொக்கப் பணம் கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து நல்லான்பிள்ளைபெற்றாள் காவல் நிலையத்தில் திவ்யா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

The post திருவெண்ணெய்நல்லூர், செஞ்சியில் 12 பவுன் நகை கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Thiruvanninallur ,Chenchi ,Tiruvanninallur ,Sivasankar ,Masilamani ,Thenmangalam ,Thiruvannainallur ,
× RELATED செஞ்சி அருகே கட்டுப்பாட்டை இழந்து...