×

குன்றத்தூர் அருகே கஞ்சா விற்ற ஒடிசா வாலிபர் கைது: 6 கிலோ பறிமுதல்

குன்றத்தூர்: குன்றத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவர்களை குறி வைத்து, ஒரு கும்பல் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக தாம்பரம் மதுவிலக்கு ஆய்வாளர் மாலதிக்கு ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. அதன்பேரில், ஆய்வாளர் மாலதி தலைமையில் போலீசார், தாம்பரம் பகுதியில் நேற்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, தாம்பரம் பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த வடமாநில வாலிபரை பிடித்து விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளார்.

இதனால், சந்தேகமடைந்த போலீசார், அவர் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் சிறு சிறு பொட்டலங்களாக கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவனை கைது செய்து போலீசார் நடத்திய விசாரணையில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அசுட்டாசெதி (26) என்பதும், ஒடிசாவில் இருந்து கஞ்சாவை மொத்தமாக ரயில் மூலம் கடத்திவந்து குன்றத்தூர், பல்லாவரம், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அவனிடமிருந்து 6 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

The post குன்றத்தூர் அருகே கஞ்சா விற்ற ஒடிசா வாலிபர் கைது: 6 கிலோ பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Odisha ,Kundarthur ,Kundarathur ,Dinakaran ,
× RELATED ஒடிசாவில் பாஜ அமைச்சரவை 12ம் தேதி பதவியேற்பு