×

கொடைக்கானல் கேபிஎம் பாறை பகுதியில் ரூ.1 கோடி மதிப்பில் சாலை பணி துவக்கம்

கொடைக்கானல், ஜூலை 27: கொடைக்கானல் நகராட்சிக்குட்பட்ட பிரகாசபுரம் அருகே உள்ளது கேபிஎம் பாறை பகுதி. இங்கு 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி நகராட்சியில் இருந்தும் இதுவரை சாலை வசதி ஏற்படுத்தப்படாமல் இருந்தது. இதனால் இப்பகுதி மக்கள் தங்களது அடிப்படை தேவைகளுக்கு சில கிமீ தூரம் நடந்து சென்று வரும் சூழ்நிலை இருந்தது. இதுகுறித்து இப்பகுதி மக்கள் தொகுதி எம்எல்ஏ ஐ.பி.செந்தில் குமாரிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து கேபிஎம் பாறை பகுதிக்கு ரூ.1 கோடி மதிப்பில் புதிய சிமெண்ட் சாலை அமைக்க கடந்த மாதம் பூமி பூஜை செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று இந்த சாலை பணிகளை நகர் மன்ற தலைவர் செல்லத்துரை, துணை தலைவர் மாயக்கண்ணன் துவங்கி வைத்தனர். இதில் நகர் மன்ற உறுப்பினர் மோகன் மற்றும் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுத்த தொகுதி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார், நகர் மன்ற தலைவர் செல்லத்துரை, துணை தலைவர் மாயக்கண்ணன் ஆகியோருக்கு இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

 

The post கொடைக்கானல் கேபிஎம் பாறை பகுதியில் ரூ.1 கோடி மதிப்பில் சாலை பணி துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Kodicanal KPM ,Kodaikanal ,Prakasapuram ,KBM ,Kodakanal KPM ,Dinakaran ,
× RELATED கொடைக்கானல் மலைச்சாலையில் கார் மீது லாரி கவிழ்ந்து விபத்து