- தோட்டத் தொழிலாளர்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம்
- Bandalur
- தேயிலை
- தோட்டத்தில்
- மேங்கோரேஞ்ச் கரோல்
- பந்தலூர் வட்ட வழக்கறிஞர்கள் குழு
- சட்ட விழிப்புணர்வு முகாம்
- தின மலர்
பந்தலூர், ஜூலை 27: பந்தலூர் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் மேங்கொரேஞ் கரோலின் தேயிலைத்தோட்டத்தில் பணிபுரிந்து வரும் புலம்பெயர்ந்த தேயிலைத்தோட்ட தொழிலாளர்களுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் அரசு ஆரம்பப் பள்ளியில் நடைபெற்றது. வட்ட சட்டப்பணிகள் ஆணை குழு தலைவரும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியுமான சிவக்குமார் கலந்துகொண்டு அடிப்படை சட்டங்கள் குறித்து பேசினார்.
முகாமில் பந்தலூர் வட்ட சட்டப் பணிகள் குழு வழக்கறிஞர்கள் சிவசுப்ரமணியன், சீனு வர்கீஸ், கணேசன், ஜான்சன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு போக்சோ வழக்குகள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு, தொழிலாளர்கள் உரிமைகள் உள்ளிட்ட அடிப்படை சட்டங்கள் குறித்து பேசினர். நிகழ்ச்சியில் வட்ட சட்ட பணிகள் குழுவின் ஊழியர்கள் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
The post தோட்டத் தொழிலாளர்களுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.