×

மாறனேரி பசுபதீசுவரர் கோயிலில் முஸ்லிம் மக்கள் மதநல்லிணக்க வழிபாடு

 

திருக்காட்டுப்பள்ளி, ஜூலை 27: தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மாறனேரி சிவகாம சுந்தரி உடனுறை பசுபதீஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா ஜூன் 25ம் தேதி அன்று நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து மண்டல பூஜைகள் நடைபெற்று வருகின்றன. மாறனேரியில் கிறிஸ்தவர்கள், முகமதியர்கள், இந்துக்கள் மத நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் மாறனேரி பசுபதீஸ்வரர் கோயிலுக்கு அவ்வூரில் வசிக்கும் முஸ்லிம் பெரியவர் முஹம்மது யூசுப் தமது குடும்பத்தாருடன் வருகை தந்து இறைவனை வழிபட்டார். உடன் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா முத்துச்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

The post மாறனேரி பசுபதீசுவரர் கோயிலில் முஸ்லிம் மக்கள் மதநல்லிணக்க வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Pasupadeeswarar temple ,Maraneri ,Thirukkatupalli ,Maraneri Sivagama Sundari Udanurai Pasupadeeswarar temple ,Thirukkatupalli, Thanjavur district ,
× RELATED தஞ்சை பசுபதீஸ்வரர் கோயிலுக்கு...