×

நாகாலாந்தில் ஆயுதம் விற்ற இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேர் கைது

திமாபூர்: நாகாலாந்தில் மத்திய ஆயுதப்படை கிடங்கில் இருந்து ஆயுதங்களை விற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர், பெண் உள்ளிட்ட 5 பேரை கைது செய்ததாக திமாபூர் போலீஸ் கமிஷனர் கெவிதுடோ சோபி தெரிவித்தார். இதில் முக்கிய குற்றவாளியான இன்ஸ்பெக்டர் மைக்கேல் யாந்தன் கிடங்கில் இருந்து ஆயுதங்களை திருடி விற்றதாக ஒப்பு கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

ஆனால் இந்த ஆயுதங்கள் யாருக்கு விற்கப்பட்டன என்பது குறித்த விவரங்கள் எதுவும் தெரியவில்லை. மத்திய ஆயுதப் படை கிடங்கில் கடந்த 9ம் தேதி ஆயுத கணக்கெடுப்பு நடத்திய போது ஆயுதங்கள் குறைந்திருப்பது தெரிய வந்ததை அடுத்து போலீசார் தங்களது விசாரணையைத் தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post நாகாலாந்தில் ஆயுதம் விற்ற இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : nagaland ,Dimapur ,Central Armed Force ,Dinakaran ,
× RELATED வடகிழக்கில் 3 மாநிலங்களில்...