திராஸ்: கடந்த 1999ம் ஆண்டு கார்பில் போரில் பாகிஸ்தானை வெற்றிபெற்றதை அடுத்து ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26ம் தேதி கார்கில் வெற்றிதினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. 24வது கார்கில் வெற்றி தினத்தையொட்டி அந்த போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதாக ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.
பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், லடாக்கின் திராஸில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில் நாட்டின் மரியாதை மற்றும் கவுரவத்தை பாதுகாப்பதற்காக எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்லலாம். அதில் எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டை கடப்பதும் அடங்கும். அதை செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். தேவைப்பட்டால் எல்லைக்கட்டுப்பாடு கோட்டை கடப்போம் என்றார்.
The post தேவை ஏற்பட்டால் எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டை தாண்டுவதற்கும் தயார்: பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டம் appeared first on Dinakaran.