×

கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த போதை ஆசாமி பிடிபட்டார்

அண்ணாநகர்: சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையை நேற்று முன்தினம் மதியம் தொடர்புகொண்ட மர்ம நபர், ‘‘கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள 1ம் நடைமேடையில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது விரைவில் வெடிக்கும்,’’ என்று கூறி அழைப்பை துண்டித்துள்ளார். இதுகுறித்து உடனடியாக கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், அங்கு விரைந்து வந்த கோயம்பேடு துணை ஆணையர் குமார் மற்றும் இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் ரமேஷ்கண்ணா பிரிவின் குமார் தலைமையிலான போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் 2 மோப்ப நாய்களுடன் பேருந்து நிலையம் முழுவதும் தீவிர சோதனை செய்தனர்.

சுமார் 2 மணி நேரமாக பேருந்து நிலையம் முழுவதும் சோதனை செய்ததில் வெடிகுண்டு இல்லை என்றும், இந்த மிரட்டல் வெறும் புரளி என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, வெடிகுண்டு எச்சரிக்கை விடுத்த மர்ம நபரின் செல்போன் சிக்னலை வைத்து விசாரித்தபோது, திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியை சேர்ந்த முருகன் (45) என்பது தெரியவந்தது. கோயம்பேடு ஜெய் பார்க் பகுதியில் சுற்றித் திரிந்த முருகனை நேற்று போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். விசாரணையில், அவர் கோயம்பேடு மார்க்கெட்டில் தங்கி, கூலி வேலை செய்து வருவதும், சம்பவத்தன்று மது போதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. அவரை கைது செய்து, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

The post கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த போதை ஆசாமி பிடிபட்டார் appeared first on Dinakaran.

Tags : Koyambedu ,Annanagar ,Chennai police control room ,
× RELATED கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து...