×

தனி ஆளாக பாகிஸ்தான் பங்கருக்குள் புகுந்தவர்: கார்கில் ஹீரோவுக்கு விமானத்தில் கவுரவம்

நாட்டுக்காக உயிரை துச்சமென தியாகம் செய்யும் ஒவ்வொரு வீரருக்கும் இந்த தேசம் எப்போதும் தலைவணங்கும். எதிரிப்படைகளிடம் மிக உயர்ந்தளவு வீரதீரத்தையும், தன்னலமற்ற தியாகத்தையும் காட்டிய படைவீரர்களுக்கான இந்தியாவின் மிக உயரிய விருதுதான் பரம்வீர் சக்ரா விருது. இது இந்திய வரலாற்றிலேயே இதுவரை 21 பேருக்கு தான் கொடுக்கப்பட்டுள்ளது. கார்கில் போரின்போது தனி ஆளாக பாகிஸ்தான் ராணுவ பங்கருக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதற்கு பரம்வீர் சக்ரா பெற்ற சுபேதார் மேஜர் சஞ்சய் குமார் சமீபத்தில் தனியார் விமானத்தில் பயணித்தார்.

வழக்கமாக விமானத்தில் சாதனையாளர்கள் போன்றவர்கள் இருந்தால் அவர்களை அந்த விமான நிறுவனம் கவுரவப்படுத்தும். அதன்படி, பரம்வீர் சக்ரா விருது பெற்ற சஞ்சய் குமாரை விமான கேப்டன், துணை கேப்டன், ஏர் ஹோஸ்டஸ் மற்றும் ஊழியர்கள் கவுரவித்தனர். அப்போது, விமானத்தில் இருந்தவர்கள் கை தட்டி அவருக்கு மரியாதை செய்தனர். பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களில் சஞ்சய் குமார் மட்டும்தான் இன்னும் ராணுவத்தில் பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சஞ்சய் குமார் கவுரவிக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

The post தனி ஆளாக பாகிஸ்தான் பங்கருக்குள் புகுந்தவர்: கார்கில் ஹீரோவுக்கு விமானத்தில் கவுரவம் appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Kargil ,Dinakaran ,
× RELATED பாக்.கிற்கு உருவாக்கிய முதல் நீர்மூழ்கி கப்பலை அறிமுகம் செய்தது சீனா