×

சாத்தூர் நான்குவழிச்சாலை அருகே இரவில் பரவிய காட்டுத் தீ

சாத்தூர்: சாத்தூர் அருகே, நான்குவழிச்சாலையில் இரவில் பரவிய காட்டுத் தீயை, பல மணி நேரம் போராடி தீயணைப்புத்துறையினர் அணைத்தனர். விருதுநகர் மாவட்டம், சாத்தூர்-கோவில்பட்டி நான்குவழிச்சாலை அருகே, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் ஓட்டல் அருகே, பல ஏக்கர் பரப்பளவில் தரிசு நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களில் புற்கள் அதிகளவில் வளர்ந்திருந்தன. கடந்த சில மாதமாக வீசிய கடுமையான வெயிலால் புற்கள் காய்ந்து சருகுபோல இருந்தன. நேற்று இரவு திடீரென புற்களில் தீப்பிடித்தது. காற்று வேகமாக வீசியதால் மளமளவென பரவியது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சாத்தூர் தீயணைப்பு துறையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆடு, மாடு மேய்ச்சலுக்கு வந்தவர்கள் பீடி, சிகரெட் பிடித்துப் போட்ட துண்டுகள் கனிந்து தீப்பிடித்து இருக்கலாம் என தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர்.

The post சாத்தூர் நான்குவழிச்சாலை அருகே இரவில் பரவிய காட்டுத் தீ appeared first on Dinakaran.

Tags : Sattur Fourth ,Sattur ,Virutunagar ,Dinakaran ,
× RELATED அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது