×

“இந்திய இலக்கியச் சிற்பிகள் – கலைஞர் மு. கருணாநிதி” நூலை முதல்வரிடம் வழங்கினார் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் ராசேந்திரன்

சென்னை: சாகித்ய அகாதெமி வெளியீடான “இந்திய இலக்கியச் சிற்பிகள் – கலைஞர் மு. கருணாநிதி” நூலை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் ம. ராசேந்திரன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று (25.7.2023) தலைமைச் செயலகத்தில், தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் ம. ராசேந்திரன் சந்தித்து, கலைஞரை பற்றி தான் எழுதி, சாகித்ய அகாதெமி வெளியிட்டுள்ள “இந்திய இலக்கியச் சிற்பிகள் – கலைஞர் மு. கருணாநிதி” நூலினை வழங்கினார்.

தமிழை நவீனமாக்கியவர்களுள் குறிப்பிடத்தக்கவர் கலைஞர் . சமகாலச் சிந்தனைகளோடு பொருத்தித் தமிழை அகப்புற நவீனம் ஆக்கியவர். மரபை விதையாக்கி, வெளியுலகச் சிந்தனையை எருவாக்கிக் கொண்டு தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பொதுமக்களிடம் கொண்டு சென்றவர்.

12 வயதில் ‘செல்வ சந்திரா’ புதினம் எழுதியவர், 14 வயதில் திருவாரூர் வீதிகளில் தமிழ்க் கொடி ஏந்திப் போராடியவர், 15 வயதில் ‘மாணவ நேசன்’ பத்திரிகை நடத்தியவர், 18 வயதில் அண்ணாவின் திராவிட நாட்டில் ‘இளமைப்பலி’ எழுதியவர், 18 வயதில் முரசொலி மாத இதழ் தொடங்கியவர், 20 வயதில் ‘சாந்தா அல்லது பழனியப்பன்’ நாடகம் எழுதி நடித்தவர், 21 வயதில் பெரியாரின் குடியரசில் துணை ஆசிரியர் ஆனவர், 25 வயதில் திரைத்தமிழைத் திருத்தத் தொடங்கியவர், 32 வயதில் சாக்ரடீசுக்குக் கிரேக்கம் வழங்கிய தீர்ப்பினைத் திருத்தி ‘இரேக்கப் பெரியார்’ நாடகம் போட்டவர், 92 வயதில் இராமானுஜர் பற்றிய தொலைக்காட்சித் தொடர் தந்தவர்.

இவ்வாறு கவிதை, கதை, புதினம், கட்டுரை, நாடகம், திரைப்படம், தொலைக்காட்சித் தொடர் என்று பல வகைப்பாடுகளிலும் வாகை சூடியவர். கால மாற்றக் கலை வெளிப்பாட்டுக்குக் கை கொடுத்து, கணினி, இணையம், சமூக ஊடகத் தொழில் நுட்பங்களோடு கை கோர்த்தவர்.

கலைஞரின் கலை இலக்கியப் பங்களிப்பு அவரது அரசியல் மற்றும் அவரது வரலாறு ஆகியவற்றின் பின்னணியில் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ம. ராசேந்திரனால் தொகுக்கப்பட்ட “இந்திய இலக்கியச் சிற்பிகள் – கலைஞர் மு. கருணாநிதி” என்ற நூலினை சாகித்ய அகாதெமி வெளியிட்டுள்ளது. இந்நிகழ்வின்போது, சென்னை சாகித்ய அகாதெமி அலுவலர் சந்திரசேகர ராஜ், வெளியீட்டுப் பிரிவு அலுவலர் சீனிவாசன் ஆகியோர் உள்ளனர்.

The post “இந்திய இலக்கியச் சிற்பிகள் – கலைஞர் மு. கருணாநிதி” நூலை முதல்வரிடம் வழங்கினார் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் ராசேந்திரன் appeared first on Dinakaran.

Tags : Former ,Vice-Chancellor ,Rasendran ,Chief Minister ,Chennai ,Sahitya Akademi ,Tamil University ,Vice ,Chancellor ,
× RELATED வாக்காளர் பட்டியலில் பெயர்...