×

ஒட்டன்சத்திரத்தில் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம்

ஒட்டன்சத்திரம், ஜூலை 25: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முதல்கட்ட முகாம் வேளாண் விற்பனைக்கூட வளாகம், ஆர்.சி.பள்ளி, காந்திநகர், கே.ஆர்.அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற முகாமை நகர செயலாளர் வெள்ளைச்சாமி துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் நகர்மன்ற தலைவர் திருமலைசாமி, வட்டாட்சியர் முத்துச்சாமி, வட்ட வழங்கல் அலுவலர் பிரசன்னா, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாண்டியராஜன், உள்ளிட்ட நகர்மன்ற உறுப்பினர்கள், வார்டு செயலாளர்கள், தன்னார்வலர்கள் உடனிருந்தனர்.

The post ஒட்டன்சத்திரத்தில் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம் appeared first on Dinakaran.

Tags : Ottanchatra ,Ottenchatram ,Ottenchatram, Dindigul district ,Entitlement ,Otanchatram ,Dinakaran ,
× RELATED ஒட்டன்சத்திரத்தில் கோடை மழையால்...