×

தளி வாய்க்கால் வடபூதிநத்தம் கிராம விவசாயிகள் ஆலோசனை

 

உடுமலை, ஜூலை25:தளி வாய்க்கால் வடபூதிநத்தம் கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் உடுமலையில் நேற்று நடந்தது. இதில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர். திருமூர்த்தி அணையில் இருந்து தளி வழியாக ஏழு குள பாசனத்துக்கு தண்ணீர் வரும் வாய்க்காலில் முறைகேடாக குழாய் பதித்து தண்ணீர் எடுத்து நடப்பது குறித்து வழக்கு நடக்கிறது. இது தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆகஸ்ட் 8-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வருகிறது. இது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

The post தளி வாய்க்கால் வடபூதிநத்தம் கிராம விவசாயிகள் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Vadaboothinantham ,Thali Canal ,Udumalai ,Vadaboothinantham Village Water Users Association ,Tali Vaikkal ,Dhali Vaikkal ,Vadaboothinantham Village Farmers ,Dinakaran ,
× RELATED உடுமலை நகர திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு