×

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் அம்பேத்கர், கலைஞர் பிறந்தநாள் பேச்சு போட்டிகள் கலெக்டர் தகவல்

நாகர்கோவில், ஜூலை 25 : குமரி மாவட்ட கலெக்டர் தர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோரின் பிறந்தநாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சு போட்டிகள் நடத்தி பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போது 2023-24ம் நிதியாண்டில் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி ஆகஸ்ட் 2ம் தேதி அன்றும், கலைஞர் பிறந்தநாளையொட்டி ஆகஸ்ட் 4ம் தேதி அன்றும் நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவ கல்லூரியில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியே பேச்சு போட்டிகள் காலை 9.30 மணியளவில் நடைபெற உள்ளன.

பேச்சு போட்டியில் பங்கேற்கும் கல்லூரி மாணவர்களை திருநெல்வேலி மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநரும், பள்ளி மாணவர்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரும் தெரிவு செய்து அனுப்புவர். போட்டிக்கான தலைப்புகள் கல்லூரி மாணவர்களுக்கு கல்லூரி கல்வி இணை இயக்குநர் வாயிலாகவும், பள்ளி மாணவர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் வாயிலாகவும் தெரிவிக்கப்படும். கல்லூரி போட்டியில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2ம் பரிசு ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.2 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. பள்ளி போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2ம் பரிசு ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.2 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. மேலும் பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்படும் போட்டியில் மட்டும் பங்கேற்ற மாணவர்களுள் அரசு பள்ளி மாணவர்கள் இரண்டு பேரை தனியாக தெரிவு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசு தொகை ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்படும். இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் அம்பேத்கர், கலைஞர் பிறந்தநாள் பேச்சு போட்டிகள் கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Ambedkar ,Tamil Development Department ,Nagercoil ,Kumari District ,Collector ,dar ,Mahatma Gandhi ,
× RELATED அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள்...