×

பேஸ்புக் நண்பரை பார்ப்பதற்காக பாகிஸ்தான் சென்ற உ.பி பெண் ஆக.20ம் தேதி இந்தியா திரும்புகிறார்

பெஷாவர்: உத்தரப்பிரதேச மாநிலம், கைலார் கிராமத்தை சேர்ந்தவர் அஞ்சு. இவர் ராஜஸ்தானில் தனது கணவர் மற்றும் மகள்(15) மகன்(6) ஆகியோருடன் வசித்து வந்தார். இவர் கடந்த 2019ம் ஆண்டு முதல் பேஸ்புக்கில் பாகிஸ்தானை சேர்ந்த நஸ்ருல்லா(29) என்பவருடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில் பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட உரிய ஆவணங்களுடன் தனது நண்பரை பார்ப்பதற்காக இவர் கடந்த வியாழன்று பாகிஸ்தான் புறப்பட்டு சென்றார். கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள உப்பர் திர் மாவட்டத்தில் உள்ள நஸ்ருல்லாவின் வீட்டிற்கு சென்றார். பாகிஸ்தான் இளைஞரை திருமணம் செய்து கொள்வதற்காக அஞ்சு இந்தியாவில் இருந்து சென்றதாக செய்திகள் பரவின.
இந்நிலையில் இதற்கு நஸ்ருல்லா மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து நஸ்ருல்லா கூறுகையில்,‘‘அஞ்சு பாகிஸ்தானுக்கு வந்துள்ளார். எங்களுக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை. அவரது விசா காலாவதியாவதால் ஆகஸ்ட் 20ம் தேதி அஞ்சு இந்தியா திரும்பி செல்லுவார்” என்று தெரிவித்துள்ளார்.

The post பேஸ்புக் நண்பரை பார்ப்பதற்காக பாகிஸ்தான் சென்ற உ.பி பெண் ஆக.20ம் தேதி இந்தியா திரும்புகிறார் appeared first on Dinakaran.

Tags : UP ,Pakistan ,Facebook ,India ,Peshawar ,Anju ,Kailar ,Uttar Pradesh ,Rajasthan ,
× RELATED பூத் ஏஜெண்டுகளுக்கு கொடுக்கப்பட்ட...