×

ரூ.3 லட்சத்தை மனைவி எடுத்து சென்றதால் கணவர் தற்கொலை: வீடியோவில் மரண வாக்குமூலம்

வேடசந்தூர்: சேமித்த பணத்தை மனைவி எடுத்து சென்றதால், கணவர் தற்கொலை செய்து கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே தாசிரிபட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (30). வேன் டிரைவர். மனைவி வினோதினி (25). 8 மாத பெண் குழந்தை உள்ளது. இவர்கள் கடந்த ஒரு மாதமாக வேடசந்தூரில் உள்ள உசேன் ராவுத்தர் தெருவில் வாடகை வீட்டில் வசித்தனர். 5 நாட்களுக்கு முன்பு தம்பதியிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக வினோதினி கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

இதனால் விரக்தியில் இருந்த கிருஷ்ணமூர்த்தி, கடந்த 22ம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி தற்கொலை செய்வதற்கு முன் செல்போனில் தனது இறப்பிற்கான காரணம் குறித்து, பேசிய வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. அதில், மனைவி வினோதினி தான் சேமித்த ரூ.3 லட்சத்தை எடுத்துக்கொண்டு சென்று விட்டதாகவும், தனது பிள்ளையை நன்றாக பார்த்து கொள்ள வேண்டும் என்று கெஞ்சியும் பேசியுள்ளார்.

The post ரூ.3 லட்சத்தை மனைவி எடுத்து சென்றதால் கணவர் தற்கொலை: வீடியோவில் மரண வாக்குமூலம் appeared first on Dinakaran.

Tags : Vedasandur ,Dindigul district ,Tasiripatti ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு...