×

வீட்டை உடைத்து நகை பணம் கொள்ளை

ஆவடி: வீட்டின் பூட்டை உடைத்து நகை பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடுகின்றனர். ஆவடி அடுத்த பட்டாபிராம் சோரஞ்சேரி, சீனிவாசா நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன்(52). இவர், அணைக்கட்டுச்சேரி பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர், கடந்த 22ம் தேதி பழனிமலை முருகன் கோவிலுக்கு குடும்பத்துடன் சாமி தரிசனம் சென்றுள்ளார். பின்னர் ராஜேந்திரன் நேற்று காலை வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது வீட்டின் முன்பக்கம் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவில் வைத்திருந்த 14 சவரன் நகை மற்றும் ரூ.2,67,000 பணம் கொள்ளைபோனது தெரியவந்தது. மேலும், கொள்ளையன் வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவி விட்டுச் சென்றுள்ளான். இதுகுறித்து பட்டாபிராம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்கு பதிவு செய்தனர். அப்பகுதி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடுகின்றனர்.

The post வீட்டை உடைத்து நகை பணம் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Avadi ,Aavadi ,Pattabram Sorancheri ,Dinakaran ,
× RELATED ஆவடி காவல் ஆணையகத்திற்கு உட்பட்ட...