×

வியாசர்பாடியில் தீவிர வாகன சோதனை விதிமீறிய 100 பேர் சிக்கினர்

பெரம்பூர்: வியாசர்பாடி கல்யாணபுரம் பகுதி அருகே நேற்று வியாசர்பாடி இன்ஸ்பெக்டர் அருள்மணிமாறன் தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சீருடை இல்லாமல் ஆட்டோ ஓட்டி வந்த ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் ஹெல்மெட் இல்லாமல் பைக்கில் வந்த வாகன ஓட்டிகள், அதிவேகமாக வந்தவர்கள் என சுமார் 100 பேர் போலீசாரிடம் சிக்கினர். அவர்களுக்கு போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சீருடை அணியாத ஆட்டோ ஓட்டு நர்களிடம், பொது மக்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு குறித்து விளக்கினர். மேலும், பிடிபட்ட அனைத்து வாகன பதிவெண்களையும் குறித்து வைத்துக்கொண்டு, அடுத்த முறை சிக்கினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்த போலீசார் அவர்களை அனுப்பி வைத்தனர்.

The post வியாசர்பாடியில் தீவிர வாகன சோதனை விதிமீறிய 100 பேர் சிக்கினர் appeared first on Dinakaran.

Tags : Vyasarpadi ,Perambur ,Vyasarbadi ,Inspector ,Arulmanimaran ,Kalyanapuram ,Dinakaran ,
× RELATED செல்போனில் பேசிக்கொண்டிருந்தபோது...