×

3 பெண்களை மணந்த கல்யாண மன்னன்: 4வதாக இளம்பெண்ணுடன் எஸ்கேப்

நாகர்கோவில்: 3 பெண்களை மணந்த கல்யாண மன்னன் 4வதாக இளம்பெண்ணுடன் ஓட்டம் பிடித்தது குமரியில் பரபரப்பை ஏற்படுத்தியது. குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே தூத்தூர் கல்லூரி பின்புறம் வசித்து வருபவர் சினு (30). மீன்பிடித் தொழிலாளி. இவரது மனைவி பிரபுஷா (23). இவர்களுக்கு இரண்டரை வயது மற்றும் 11 மாதங்களில் இரண்டு ஆண் பிள்ளைகள் உண்டு. கடந்த 17ம் தேதி சினு மீன்பிடிக்க கடலுக்கு சென்றுவிட்டார். அவர் திரும்பி வந்து பார்த்த போது, பிரபுஷாவும் 11 மாத குழந்தையையும் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது அவர் நித்திரவிளை போலீசில் நேற்று புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: கலிங்கராஜபுரம் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் சதாம் ஹுசைன். இவர் கோட்டார் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. பின்னர் அந்தப் பெண்ணை பிரிந்த சதாம் ஹூசைன், கருங்கல் பகுதியை சேர்ந்த மற்றொரு இளம்பெண்ணை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்த பெண் மூலமாகவும் ஒரு குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து அவரை கழட்டிவிட்ட சதாம் ஹுசைன் இரணியல் சானல்கரை பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த திருமணம் செய்து குடித்தனம் நடத்தியுள்ளார்.

அதில் அவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனராம். தற்போது சதாம் ஹுசைன் அந்த பெண்ணையும் குழந்தைகளையும் விரட்டிவிட்டு, 4வதாக பிரபுஷாவுடன் கம்பி நீட்டியுள்ளார். இவ்வாறு போலீசார் கூறினர். உண்மையிலேயே பிரபுஷா, சதாம் ஹுசைனுடன் விருப்பப்பட்டு சென்றாரா? அல்லது அவரை சதாம் ஹுசைன் கடத்தி சென்றாரா? என்பது குறித்து நித்திரவிளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post 3 பெண்களை மணந்த கல்யாண மன்னன்: 4வதாக இளம்பெண்ணுடன் எஸ்கேப் appeared first on Dinakaran.

Tags : Kallyana King ,Kumary. ,Kumari District ,Kanyana King ,
× RELATED கன்னியாகுமரியில் கொட்டி தீர்த்த கனமழை; மக்கள் மகிழ்ச்சி..!!