×

வேலூரில் வீதியில் கிடைத்தது ₹21 ஆயிரத்தை போலீசில் ஒப்படைத்த தொழிலாளி

வேலூர் : வேலூரில் வீதியில் கிடைத்த ₹21 ஆயிரத்தை போலீசில் ஒப்படைத்த கட்டிடத்தொழிலாளியை போலீசார் பாராட்டினர்.வேலூர் சலவன்பேட்டை தேவராஜ் நகரை சேர்ந்தவர் செல்வகுமார். கட்டிடத்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு சுமார் 10 மணியளவில் பணி முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

சலவன்பேட்டை நரசிங்கசாமி மடம் அருகில் நடந்து சென்றபோது அவரது காலில் ஏதோ தட்டுப்பட்டது. அதை எடுத்து பார்த்தபோது ரப்பர் பேண்டால் சுற்றப்பட்ட பணக்கட்டாக இருந்தது. அதை பிரித்து எண்ணியபோது ₹21 ஆயிரம் இருந்தது தெரிய வந்தது. யாரோ ரோட்டில் தவற விட்டு சென்றிருக்கலாம் என்று எண்ணிய செல்வகுமார், அதை நேற்று காலை வேலூர் தெற்கு போலீசில் ஒப்படைத்தார். ரோட்டில் கிடைத்த பணத்தை ஒப்படைத்த கட்டிட தொழிலாளியின் நேர்மையை போலீசார் வெகுவாக பாராட்டினர்.

The post வேலூரில் வீதியில் கிடைத்தது ₹21 ஆயிரத்தை போலீசில் ஒப்படைத்த தொழிலாளி appeared first on Dinakaran.

Tags : Vellore ,Vellore Salavanpet Devaraj Nagar ,Dinakaran ,
× RELATED கோடை விடுமுறையால் செல்போனில் மூழ்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள்